உன்னை சந்தித்தப்பின் வரும் என் பிறந்தநாள் மட்டுமே பிடித்திருக்கிறது நீ என்னை வாழ்த்துவதால்....
*********************************************
உன் கை பிடித்து அக்னி வலம் வருகையில் என்னை கைவிட மாட்டாயே என்பது போல கையை இறுக்கி பிடித்தாய்... என் உயிர் உன்னோடு இருக்கையில் உடல் மட்டும் எங்கு செல்லும்....
********************************************** தலை குனிந்து பூமி பார்த்தே வெட்கப்படும் நீ நிமிர்ந்தும் வெட்கப்படு நானும் ரசித்துவிட்டு போகிறேன் உன் வெட்கத்தை....
நீ என் தோள்மீது சாய்ந்து கொள்ள கேட்டாய்... என் தோளே நீ சாய்ந்து கொள்ளத்தான் என்று உனக்கு தெரியாதா....
********************************************
உன்மேல் கொண்ட காதலினால் உன் விருப்பங்கள் யாவும் என்னுடயதாகி விட்டன....
******************************************** நிலவின் அழகில் பிரம்மித்திருக்கிறேன் உன்னை காணும் வரை... நிலவுக்கு செல்ல ஆசைபட்டிருக்கிறேன் நிலா மகளாய் நீ வரும்வரை....
********************************************* நாம் காதலிக்க ஆரம்பித்தப் பின் என்னை தவிர வேறு ஒருவரையும் பார்க்க பிடிப்பதில்லை என்றாய்... எனக்கோ பார்ப்பதற்கு என்னையே பிடிப்பதில்லை உன்னை தவிர....
******************************************** மீண்டும் வரும் என் பிறந்தநாளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன் ... நீ எனக்கு கூறும் அந்த நள்ளிரவு வாழ்த்து செய்திக்காக....