Friday, June 4, 2010

மரங்கள்




சாலையின் இருபுறமும்
நட்ட
செடிகள்
வருடங்களில்

மரங்கள்
ஆனது...
அனைவருக்கும்

நிழல்
குடையாய்...
பறவைகள்
வசிக்கும்
சரணாலயமாய்
மாறின...
காற்றுக்கும்
பஞ்சமில்லை...
வாகன
நெரிசலை தவிர்க்க...
சாலையை
அகலப்படுத்தும்
பணிக்காக
வெட்டி சாய்த்தார்கள்
உயிருள்ள
மரங்களை...
இதயம்
கனத்தது...
விறகாகிபோன

மரங்களை
பார்த்து....

காதல் நிறைந்த உலகம் - 5




காதல் நிறைந்த உலகம்

தினமும் அதிகாலையில்
நீ
இடும் கோலத்தால்
வாசல்
அழகாகிறது....
தினமும்
நீ உன் கூந்தலில்
சூடிக்கொள்வதால்

பூக்கள்
அழகாகின்றன....
தினமும்
ஒரு முறையாவது
என்னையும்
தொட்டு விடு
நானும்
அழகாகிவிடுவேன்....