Friday, December 31, 2010

குழந்தை






உறக்கம் வர
அம்மாவிடம்
கதை
கூறச்சொல்லி

படுத்து
கேட்டுக்கொண்டிருந்தாள்
பிஞ்சுக்
குழந்தை...
மறுநாள்
பொம்மையை
அணைத்தபடி
தான் கேட்ட
கதையை
கூறிக்கொண்டிருந்தாள்
அந்த
பொம்மையை
உறங்கச்சொல்லி
....


*********************************************

வெளியில் கிளம்பிய
என்னை
பார்த்து அழுத
குழந்தையை

சமாதானப்படுத்த

வீடு திரும்பும்பொழுது
மிட்டாய்
வாங்கி வருகிறேன்
என்றேன்
...
திருமணநாள்
அன்று
கோவிலுக்கு
அழைத்து செல்லாமல்
வீட்டிற்கு
நேரம் கழித்து
வந்த
என்னை பார்த்து
சிணுங்கிய
மனைவியிடம்
அப்பா
மிட்டாய் வாங்கி
வந்திருப்பார்

அழுகாதே
என்றது
குழந்தை
....

***************************************************

அம்மாவை பிடிக்குமா
அப்பாவை
பிடிக்குமா
என்று
கேட்டேன்
குழந்தையிடம்
...
தன்னோடு
எப்பொழுதும்
இருக்கும்
கரடி பொம்மையை
தான்
பிடிக்கும் என்று
கட்டிக்கொண்டது
குழந்தை...
அலுவலகத்திலிருந்து
திரும்பிய
எங்கள்
இருவருக்கும்
சுரீரென்றது
....

**************************************************

Wednesday, August 11, 2010

நண்பன் - அரவிந்த்




பள்ளி பருவத்து
நம்
முதலாம் வகுப்பில்
வெய்யில்
தாகத்தை தணிக்க
தண்ணீர்
கேட்டாய் என்னிடம்...

நான்
கொடுத்த நீர்
உன்
தாகத்தை மட்டும்
தணிக்கவில்லை
...
நம்முள்
நட்பையும் திணித்தது...

அன்று
வேரூன்றிய
நம்
நட்பு மரமாய் நம்முள்
வளர்ந்து
நிற்கிறது இன்று...

நாம்
கவலையின்றி
அரைக்கார்
சட்டையுடன்
சுற்றி
திரிந்த இடங்களும்...
மிதிவண்டியில் சுற்றிய
வயல்
காடுகளும்
திரை
அரங்குகளும்
பறை
சாற்றுகின்றன
இன்றும்
நம் நட்பின் ஆழத்தை...

பள்ளியில் பிரிந்தும்
நம்
நட்பு
கல்லூரி
காலத்திலும்
நெருக்கமாய்
தொடர்ந்தது...
வேலைக்காக
இன்று நீ
வெளி
நாட்டில் இருந்தும்
குறையவில்லை

நம்
நட்பின் ஆழம்...

நீ
என்னோடு இல்லாத
இந்த
வெற்றிடத்தை
நிரப்ப
உன்னையும்
நம்
இளைமைக்கால
நினைவுகளையும்
தவிர
வேறு
எவராலும் முடியாது...

பின்னோக்கி பார்க்கிறேன்
நம் இளமை காலத்தை
ஏக்கத்தோடு...

Monday, August 9, 2010

வாழ்க்கை பாதை




கடந்து வந்த
வாழ்க்கை
பாதையை
பின்னோக்கி
பார்க்கிறேன்
நரைத்த
தலையோடும்
தளர்ந்த
உடலோடும்....

வெகு
தொலைவில்
நீ
தெரிகிறாய்
நாம்
பிரிந்த
இளைமை
காலத்தில்....

திரும்பவும்
இளமையோடு
உன் கரம் பிடித்து
வாழ்க்கை
பாதையை
கடக்க
ஆசை....

ஆனாலும் ஒருவழி
பாதையாய்
போய்விட்டது
இந்த
வாழ்க்கை பயணம்
நாம்
சேர வழி இல்லாமல்....

Monday, August 2, 2010

உறவுகள்




கண்டதும் பல
உறவு
பெயர்களில்
அழைத்தார்கள்
...
ஆனாலும்
இவர்கள்
ரத்தத்தால்
வந்த
உறவுகள்
அல்ல...
கண்டப்பின்
நம்மோடு
உறவாகிப்போனவர்கள்
....

இவர்களை

பெற்றவர்
யாராயினும்
வளர்வது
ஓரிடத்தில்....

இவர்களிடம்

ஜாதி
மதங்களை கடந்த
உறவும்
பாசமும் நட்பும் தெரிந்தது....

பண்டிகைகள்
எல்லாம்
சிறப்பாகின்றன
இவர்கள்
கொண்டாடுவதால்
....

இவர்கள்
அனைவரோடும்
ஒரு
வேளை
உணவு
உண்டது
வாழ்கையில்
செலவு
செய்த
பணத்திற்கு
முதன்
முதலாக
கிடைத்த
சந்தோஷம்....

பிரியும்போது

தோன்றியது
என்னுள்
இவர்கள்
அனாதைகள்
அல்ல
என்று
உறவாக
நாமிருக்கும்போது....


நண்பர்கள்



பள்ளி கால நண்பர்கள்
அலுவலக பணியின்
தீவிரத்தில் காணாமல் போனார்கள்....

கல்லூரி காதல்
திருமணத்துக்குப்பின்
மறந்துபோனது....

வீடு அலுவலகமென்று
அன்றாட இயந்திர
வாழ்க்கை பழகிப்போனது....

அன்று அப்பாவின் திட்டு
நினைவுக்கு வந்தது
பொறுப்பற்று நண்பர்களுடன்
ஊர் சுற்றுகிறான் என்று...
நாங்கள் இன்றைய இளைஞர்கள்....

நம்பிக்கை




நட்டு வைத்த நாற்றுகளுக்கு
நீர் பாசனம் வேண்டி
மழை
பெய்ய
காத்திருந்தான்
விவசாயி....

அறுவடை
பணத்தில்
வீட்டிற்க்கு
அரிசி வாங்கவும்
பிள்ளையின்
பள்ளி
கட்டணத்தை
கட்டவும்
எண்ணமுண்டு
....

கருத்த
மேகத்தை பார்த்து
புன்னகை
தவழ்ந்தது...
அடித்த
ஆடி காற்றில்
மேகமும்
கலைந்து
கவலையும்
தொற்றிகொண்டது....

ஏமாற்றத்துடன்
வீடு
திரும்பியவனிடம்

வருண
பகவானை
வேண்டுவோம்
என்றான் பிள்ளை...
மகனின்
நம்பிக்கை
புத்துணர்ச்சி
தந்தது
அவனுள்
மழை வருமென்று....

Friday, June 4, 2010

மரங்கள்




சாலையின் இருபுறமும்
நட்ட
செடிகள்
வருடங்களில்

மரங்கள்
ஆனது...
அனைவருக்கும்

நிழல்
குடையாய்...
பறவைகள்
வசிக்கும்
சரணாலயமாய்
மாறின...
காற்றுக்கும்
பஞ்சமில்லை...
வாகன
நெரிசலை தவிர்க்க...
சாலையை
அகலப்படுத்தும்
பணிக்காக
வெட்டி சாய்த்தார்கள்
உயிருள்ள
மரங்களை...
இதயம்
கனத்தது...
விறகாகிபோன

மரங்களை
பார்த்து....

காதல் நிறைந்த உலகம் - 5




காதல் நிறைந்த உலகம்

தினமும் அதிகாலையில்
நீ
இடும் கோலத்தால்
வாசல்
அழகாகிறது....
தினமும்
நீ உன் கூந்தலில்
சூடிக்கொள்வதால்

பூக்கள்
அழகாகின்றன....
தினமும்
ஒரு முறையாவது
என்னையும்
தொட்டு விடு
நானும்
அழகாகிவிடுவேன்....

Saturday, May 29, 2010

காதல் நிறைந்த உலகம் - 4




காதல் நிறைந்த உலகம்

தமிழ் அகராதியில்
உன் பெயரை
சேர்த்துவிட்டு
அழகு என்ற
வார்த்தையை
நீக்கிவிட போகிறார்களாம்....

****************************************

காற்றாய் மட்டும்
நான் இருந்திருந்தால்....
உன்னை வருடிக்கொண்டே
இருக்கும் சந்தோஷம்
கிடைத்திருக்கும்....

****************************************

ப்ரியங்களுடன்
நேத்ரன்


Tuesday, May 25, 2010

காதல் நிறைந்த உலகம் - 3




காதல் நிறைந்த உலகம்

உன்னை சந்தித்தப்பின் வரும்
என் பிறந்தநாள் மட்டுமே
பிடித்திருக்கிறது
நீ என்னை வாழ்த்துவதால்....

*********************************************
உன் கை பிடித்து
அக்னி வலம் வருகையில்
என்னை கைவிட மாட்டாயே என்பது போல
கையை இறுக்கி பிடித்தாய்...
என் உயிர் உன்னோடு இருக்கையில்
உடல் மட்டும் எங்கு செல்லும்....

******************************
****************
தலை குனிந்து பூமி பார்த்தே
வெட்கப்படும் நீ
நிமிர்ந்தும் வெட்கப்படு
நானும் ரசித்துவிட்டு
போகிறேன் உன் வெட்கத்தை....

******************************
****************

ப்ரியங்களுடன்
நேத்ரன்

காதல் நிறைந்த உலகம் - 2




காதல் நிறைந்த உலகம்

நீ ஒற்றை ரோஜா
சூடிவந்தாலும்
என் மனதில்
ரோஜா கூட்டமே
வந்த உணர்வு....

************************************

உனக்காக காத்திருக்கும் நான்
ஜென்ம சாபல்யம் அடைந்தேன்
உன் ஒற்றைப் புன்னகையில்....

******************************
*******

நான் உன்னை காதலிக்கறேன்
என்றபொழுது பதிலுக்கு
நானும் தான் என்று
பளிச்சென்று கூறினாயே
அக்கணம் முதல்
நான் நீ ஆகிவிட்டாய்....

******************************
*********

ப்ரியங்களுடன்
நேத்ரன்

காதல் நிறைந்த உலகம் - 1




காதல் நிறைந்த உலகம்

நீ என் தோள்மீது
சாய்ந்து கொள்ள கேட்டாய்...

என் தோளே நீ

சாய்ந்து கொள்ளத்தான் என்று

உனக்கு தெரியாதா....


********************************************
உன் மேல் கொண்ட காதலினால்
உன் விருப்பங்கள் யாவும்
என்னுடயதாகி விட்டன....

******************************
**************
நிலவின் அழகில் பிரம்மித்திருக்கிறேன்
உன்னை காணும் வரை...
நிலவுக்கு செல்ல ஆசைபட்டிருக்கிறேன்
நிலா மகளாய் நீ வரும்வரை....

******************************
***************
நாம் காதலிக்க ஆரம்பித்தப் பின்
என்னை தவிர வேறு
ஒருவரையும் பார்க்க
பிடிப்பதில்லை என்றாய்...
எனக்கோ பார்ப்பதற்கு
என்னையே பிடிப்பதில்லை
உன்னை தவிர....

******************************
**************
மீண்டும் வரும் என் பிறந்தநாளை
எதிர்நோக்கி ஆவலுடன்
காத்திருக்கிறேன் ...
நீ எனக்கு கூறும்
அந்த நள்ளிரவு
வாழ்த்து செய்திக்காக....

******************************
****

ப்ரியங்களுடன்
நேத்ரன்