Tuesday, May 25, 2010

காதல் நிறைந்த உலகம் - 2




காதல் நிறைந்த உலகம்

நீ ஒற்றை ரோஜா
சூடிவந்தாலும்
என் மனதில்
ரோஜா கூட்டமே
வந்த உணர்வு....

************************************

உனக்காக காத்திருக்கும் நான்
ஜென்ம சாபல்யம் அடைந்தேன்
உன் ஒற்றைப் புன்னகையில்....

******************************
*******

நான் உன்னை காதலிக்கறேன்
என்றபொழுது பதிலுக்கு
நானும் தான் என்று
பளிச்சென்று கூறினாயே
அக்கணம் முதல்
நான் நீ ஆகிவிட்டாய்....

******************************
*********

ப்ரியங்களுடன்
நேத்ரன்

No comments:

Post a Comment