Tuesday, May 25, 2010

காதல் நிறைந்த உலகம் - 1




காதல் நிறைந்த உலகம்

நீ என் தோள்மீது
சாய்ந்து கொள்ள கேட்டாய்...

என் தோளே நீ

சாய்ந்து கொள்ளத்தான் என்று

உனக்கு தெரியாதா....


********************************************
உன் மேல் கொண்ட காதலினால்
உன் விருப்பங்கள் யாவும்
என்னுடயதாகி விட்டன....

******************************
**************
நிலவின் அழகில் பிரம்மித்திருக்கிறேன்
உன்னை காணும் வரை...
நிலவுக்கு செல்ல ஆசைபட்டிருக்கிறேன்
நிலா மகளாய் நீ வரும்வரை....

******************************
***************
நாம் காதலிக்க ஆரம்பித்தப் பின்
என்னை தவிர வேறு
ஒருவரையும் பார்க்க
பிடிப்பதில்லை என்றாய்...
எனக்கோ பார்ப்பதற்கு
என்னையே பிடிப்பதில்லை
உன்னை தவிர....

******************************
**************
மீண்டும் வரும் என் பிறந்தநாளை
எதிர்நோக்கி ஆவலுடன்
காத்திருக்கிறேன் ...
நீ எனக்கு கூறும்
அந்த நள்ளிரவு
வாழ்த்து செய்திக்காக....

******************************
****

ப்ரியங்களுடன்
நேத்ரன்

No comments:

Post a Comment