Monday, August 2, 2010

உறவுகள்




கண்டதும் பல
உறவு
பெயர்களில்
அழைத்தார்கள்
...
ஆனாலும்
இவர்கள்
ரத்தத்தால்
வந்த
உறவுகள்
அல்ல...
கண்டப்பின்
நம்மோடு
உறவாகிப்போனவர்கள்
....

இவர்களை

பெற்றவர்
யாராயினும்
வளர்வது
ஓரிடத்தில்....

இவர்களிடம்

ஜாதி
மதங்களை கடந்த
உறவும்
பாசமும் நட்பும் தெரிந்தது....

பண்டிகைகள்
எல்லாம்
சிறப்பாகின்றன
இவர்கள்
கொண்டாடுவதால்
....

இவர்கள்
அனைவரோடும்
ஒரு
வேளை
உணவு
உண்டது
வாழ்கையில்
செலவு
செய்த
பணத்திற்கு
முதன்
முதலாக
கிடைத்த
சந்தோஷம்....

பிரியும்போது

தோன்றியது
என்னுள்
இவர்கள்
அனாதைகள்
அல்ல
என்று
உறவாக
நாமிருக்கும்போது....


No comments:

Post a Comment