
நட்டு வைத்த நாற்றுகளுக்கு
நீர் பாசனம் வேண்டி
மழை பெய்ய
காத்திருந்தான் விவசாயி....
அறுவடை பணத்தில்
வீட்டிற்க்கு அரிசி வாங்கவும்
பிள்ளையின் பள்ளி
கட்டணத்தை கட்டவும்
எண்ணமுண்டு....
கருத்த மேகத்தை பார்த்து
புன்னகை தவழ்ந்தது...
அடித்த ஆடி காற்றில்
மேகமும் கலைந்து
கவலையும் தொற்றிகொண்டது....
ஏமாற்றத்துடன் வீடு
திரும்பியவனிடம்
வருண பகவானை
வேண்டுவோம் என்றான் பிள்ளை...
மகனின் நம்பிக்கை
புத்துணர்ச்சி தந்தது
அவனுள் மழை வருமென்று....
No comments:
Post a Comment