Tuesday, March 22, 2011

வாழ்க்கை




வாழ்க்கையை பின்னோக்கி
பார்க்கிறேன்
...
அப்பா
மட்டுமே என்
கதாநாயகனாக
...
அம்மாவின்
அணைப்பில்
மட்டும்
தெரிந்த அன்பு...
அப்பாவின்
தோளில்
என்னை
சாய்த்துக்கொண்ட
தருணங்கள்
...
உடன்
பிறந்தவள் மட்டும்
என்
விளையாட்டு எதிரியாக...
முட்டியில்
ஏற்பட்ட சிராய்ப்புகள்
மட்டும் வலிகளாக...
பொம்மைகள்
மட்டும்
உடைத்த
பொருள்களாக...
புரிகிறது
இப்பொழுது
காலம்
மிகவும்
மாறிவிட்டதென்று ....

No comments:

Post a Comment