Saturday, October 15, 2011

நீ




தொலை தூரப் பயணங்கள்
உற்சாகமாகியது
நீ என்னோடு பயணித்த வேளைகளில்...
இல்லம் சொர்கமாகியது
நீ என்னோடு கழித்த பொழுதுகளில்...
மகிழ்ச்சி ஆக்கியது
உன் வருகைக்காக மணிக்கணக்கில்
காத்திருந்த தருணங்களில்...

இன்று ஐந்து நிமிடப்
பயணம் களைபாகிறது...
வீடு நரகமாகிறது...
ஒரு நிமிட காத்திருப்பும்
வெறுப்பாகிறது...
நீ என்னோடு இல்லாத இவ்வுலகில்...

No comments:

Post a Comment