
கடலின் சீற்றத்திற்கு
அச்சமுண்டு
நீ கோவமாய் சீரும்வரை...
தீயின் சூடிற்க்கு
அஞ்சியதுண்டு
உன் சொற்கள் சுடும்வரை...
இருளை கண்டு
பயந்ததுண்டு
வெளிச்சமாய் நீ தோன்றும்வரை...
கனவுகள் பிடித்ததில்லை
நீ என் கனவில் வரும்வரை...
தாயின் அரவணைப்பு மட்டும்
பிடித்ததுண்டு
நீ என்னை அணைக்கும்வரை...
No comments:
Post a Comment